பதிவு செய்த நாள்
21
மே
2012
11:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்றிரவு விடிய விடிய பூச்சொரிதல் விழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 13 ம் தேதி இரவு 7 மணிக்கு அமராவதி ஆற்றில் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபராதனைகள் செய்யப்பட்ட ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செ ல்லப்பட்டது. அதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்றிரவு 9 மணி முதல் கரூர் நகரில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் பூச்சொரிதல் ஊர்வலம் தொடங்கியது. கரூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அதிகாலை 1.30 மணி வரை பூச்சொரிதல் ஊர்வலம் சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 20 ம் தேதி காப்பு கட்டுதல், 28 ம் தேதி திருத்தேர், 30 ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குறிப்பாக வரும் 27, 28, 29, 30 ம் தேதி ஆகிய நாட்களில் மாவிளக்கு மற்றும் பால்குடம் ஊர்வலமும், வரும் 28, 29 ம் தேதிகளில் அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 7 ம் தேதி பஞ்சபிரகாரம், 8 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ம் தேதி ஊஞ்சல், 10 ம் தேதி அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.