பதிவு செய்த நாள்
30
செப்
2020
10:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல, தடை விதித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள் கடந்த, 1 முதல் வழிபாட்டுக்கு திறக்க, அரசு அனுமதித்தது. அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (அக்.,1ம் தேதி) அதிகாலை, 1:10 முதல், 2ம் தேதி அதிகாலை, 2:55 வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிப்பதாக, மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார். ஏழாவது மாதமாக, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு, தடை தொடர்கிறது.