திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நந்தீஸ்வரர், மூலவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரா தனை நடந்தது. மாலை பிரதோஷ நாயகர், அம்பாளுடன் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரும்பை: மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில், பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நந்தி, மாகாளேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.