பிரதோஷ வழிபாடு: காரைக்கால் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2020 04:09
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு திருநள்ளாறு கோவில் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பலவகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதுபோல் பார்வதீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்வேறு முக்கிய கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.