பதிவு செய்த நாள்
01
அக்
2020
11:10
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு புரட்டாசி சுக்லபட்ச சதுர்தசி திதி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.நடராஜருக்கு ஆண்டுக்கு 6 வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் ஒன்றான புரட்டாசி மாத சுக்லபட்ச சதுர்தசி திதியை முன்னிட்டு நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, அதிகாலை திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடத்தி, அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது.