காரைக்குடி : காரைக்குடி செக்காலை வைத்தியநாத சுவாமி கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு தொடர் ராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. தினமும் மாலை 6:00 மணிக்கு கவிஞர் சோமசுந்தரன் ராமவாதாரம், சீதா கல்யாணம், கைகேயி வரம், குகன்நட்பு, ஜடாயு மோட்சம், சுந்தரகாண்டம்,ராமர் பட்டாபிேஷகம் குறித்து சொற்பொழிவாற்றினார். செக்காலை நகரத்தார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.