கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் பவுர்ணமியையொட்டி திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் புரட்டாசி மாதப் பவுர்ணமியையொட்டி, நேற்று காலை 10;00 மணிக்கு அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓதுவார்கள் கலந்துகொண்டு திருஅருட்பா பாடல்களைப் பாடினர்.அதனைத் தொடர்ந்து 12:00 மணியளவில் திரைநீக்கி ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு, அருட்பிரகாச வள்ளாலார் சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சத்சங்கச் செயலாளர் வசந்தராயன் செய்தார்.