உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையொட்டி கருட சேவை உற்சவத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையொட்டி சுவாமிக்கு காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன். முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.