* தன்னை அறிய முயல்வதே மேலான இன்பம். * கடவுளை தாழ்த்தியோ மனிதனை உயர்த்தியோ பேசுவது கூடாது. * குறையே இல்லாத புகழ் கடவுளுக்கு மட்டுமே உண்டு. * நடுநிலை தவறாமல் மனிதன் வாழ வேண்டும். * கடவுளின் புகழ் பாடினால் வாய் கூட மணக்கும். * கோபம் வந்தால் மவுனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். * நோயற்ற வாழ்வைப் பெற வழிபாடு செய்யுங்கள். * கோயில் வழிபாட்டால் உடல், உள்ளம் குளிரும். * உலகம் நலம் பெற முடிந்த நல்லதை செய்யுங்கள் * தவறு செய்ய வேண்டாம். மீறி செய்தால் திருத்திக் கொள்ளுங்கள். * இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். * பகட்டாக உடுத்துவது ஆன்மிகத்திற்கு புறம்பானது. * பெற்றோரே உங்களின் முதல் தெய்வங்கள். * பொது நோக்கத்துடன் செயலில் ஈடுபடுங்கள். * உத்தமர்களுடன் விரும்பி நட்பு பாராட்டுங்கள். * உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள். * பிறரது குற்றங்களை ஒருபோதும் கவனிக்காதீர்கள்.