பணம் தேவைக்கு அதிகமாக இருப்பவர்கள் அன்னதானம், கல்விதானம் செய்யலாம். அதற்கு வழியில்லாத பட்சத்தில், சண்டையிடும் இருவரை சமாதானம் செய்து வைத்தாலே போதும். தானம் செய்ததற்கான நன்மை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள்...ஏன் உங்கள் குழந்தைகள் கூட ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையில் சமாதானம் செய்து வைத்தால் தர்மத்திற்கு ஒப்பாகும் என்கிறது குர்ஆன்.