திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி, தாய் வடிவில் வந்து ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தவர். இங்கு தான் நவக்கிரக நாயகனான சூரியனுக்கும், உஷாதேவிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம். அதன் அடிப்படையில், நவக்கிரக மண்டபத்தில் மற்ற கிரகங்களான சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டும் மணக்கோலத்தில் இருக்கும் சூரியன், உஷாதேவியை பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.