* பணமே பிரதானம். பணத்தால் தான் உலகம் இயங்குகிறது. * கடவுள் அருள் இருந்தால் நினைத்தது நடக்கும். * நாக்கை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும். * நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப முடியாது. * பெரியவர்களின் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும். * பெற்றோரை மதிப்பவர்களே நல்ல பிள்ளைகள். * இக்கட்டான நேரத்தில் உதவி கேட்கும் போதுதான் ஒருவரின் குணத்தை தீர்மானிக்க முடியும். * துன்பத்திற்கு மூலகாரணம் மனிதனின் முட்டாள்தனம். * நல்லவர் நட்பால் வாழ்வு பிரகாசமாகும். * புதிய விஷயத்தை கற்கும் போது கூச்சப்படுவது கூடாது. * இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்திடு. * சாந்தமான மனம் இருந்தால் சந்தோஷம் தானாக வரும். * பிரச்னையில் உடனிருப்பவர்களே நல்ல உறவினர்கள்.. * துன்பத்தில் கை கொடுப்பவனே நல்ல நண்பன். * அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் இவர்களோடு வாக்குவாதம் செய்யாதே.