Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கொடுக்கூரில் இன்று கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அணை முனியப்பன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு நிழற்கூடம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2012
11:05

மேட்டூர்: மேட்டூர் அணை முனியப்பன் கோவில் வளாகத்தில், பயணிகள், பக்தர்கள் தங்குவதற்காகவும், உணவு சாப்பிடவும், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் கட்டப்படவுள்ளது. மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ளது முனியப்பன் கோயில். விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் சேலம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முனியப்பன் கோயிலுக்கு வருகின்றனர். மேலும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற முனியப்பன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு, வளாகத்திலேயே சமைத்து சாப்பிடுவர். விசேஷ நாளில் முனியப்பன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்படும். கோயில் வளாகத்தில் நிழற்கூடம் இல்லாததால் கோடை காலத்திலும், மழைக்காலத்திலும் சமையல் செய்து சாப்பிடும் பக்தர்கள் நிழற்கூடம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி முனியப்பன் கோவில் வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட நிழற்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறியதாவது: வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நலன் கருதி அணை முனியப்பன் கோவில் வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், 150 அடி நீளம் மற்றும், 80 அடி அகலத்தில் பக்தர்கள் உணவு சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் பிரமாண்ட நிழற்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மேட்டூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் மற்றும் என் சொந்த நிதி, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறேன். நிழற்கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar