* விடாமுயற்சியால் கெடுதலான விதியையும் மாற்ற முடியும். * உழைப்பவன் வருந்தினால் உலகம் அழிந்து விடும். * நன்கு கற்றவர்களிடமும் அறியாமை இருக்கும். * சொல்வது எளிது. அதை பின்பற்றுவது கடினம். * முடியாத செயலையும் முடிப்பவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர். * ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் அழிந்து விடும். * அன்பு இருந்தால் தான் உயிருள்ளதாக பொருள். இல்லாவிட்டால் வெறும் எலும்பும், தோலும்தான். * பணிவும், இன்சொல்லுமே ஒருவனுக்கு அழகைத் தரும். * மனதால் தவறு செய்ய நினைப்பதும் கூட தீமையானது. * திருடி சேர்த்த பணம் வளர்வது போல் இருந்தாலும் முடிவில் அழியும். * ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர். * மனதில் குற்றம் இல்லாமல் வாழ்வதே சிறந்த அறம். * இல்லாதவர்க்கு தருவதே சிறந்த கொடை. * முயற்சி இருப்பவனிடம் செல்வம் பெருகும். * பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. * அருள் ஒன்றே செல்வங்களில் சிறந்த செல்வம். * பொருள் இல்லாதவருக்கு உலக வாழ்வு துன்பம் தரும். * அருள் இல்லாதவருக்கு வானுலக வாழ்வு கிடைக்காது. * பொருள் இழந்தவர்களும் ஒருநாள் பொருள் வளம் அடைவார்கள். * தெய்வத்தின் அருளால் கைகூடாமல் போனாலும் செய்யும் முயற்சி கூலி தரும். * குறைவாக உண்பவரிடம் இன்பம் நீங்காமல் நிற்கும். * அதிகமாக உண்பவரிடம் நோய் நிலைத்து நிற்கும்.