அக்கறையுடன் ஒருவர் பள்ளிவாசலில் தொழுதால், ‘‘ இறைவா! இவர் மீது கருணை காட்டு!’ என வானவர்களும் வேண்டுவர். அவர் தொழுகைக்கு செல்லும் போதெல்லாம் ஆசீர்வாதம் நீடிக்கும். பள்ளிவாசலில் இருக்கும் நேரத்தில் வீண்பேச்சில் ஈடுபட்டாலோ, பிறருக்கு இடைஞ்சல் ஏற்படும் விதத்தில் சப்தமிட்டாலோ, இறைவனின் சாபம் உன் மீது உண்டாவதாக’ என வானவர்கள் எச்சரிப்பர். வருங்காலத்தில் பள்ளிவாசலுக்கு வருவோரின் பேச்சு பெரும்பாலும் உலகத்தைப் பற்றியதாகவே இருக்கும். அவர்களுடன் சேராதீர்கள். ஏனெனில் அவர்களுடைய வழிபாடுகளை இறைவன் ஏற்க மாட்டான்’’ என்கிறார் நாயகம்.