Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி ... கோவிலை இடிக்கக்கூடாது! முத்தண்ணன் குளக்கரை மக்கள் எதிர்ப்பு கோவிலை இடிக்கக்கூடாது! முத்தண்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை பக்தர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:
திருமலை பக்தர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கம்

பதிவு செய்த நாள்

14 அக்
2020
11:10

திருத்தணி : திருமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக, அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச், 24ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் முதல், அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பஸ்கள், மாவட்டங்களுக்கு இடையே தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து, திருமலைக்கு செல்லும் பக்தர்கள், பஸ் வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், பக்தர்கள் நலன் கருதி, சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம் மற்றும் திருத்தணி ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, அரசு பஸ்கள் தமிழக - ஆந்திர மாநில எல்லையான தடுக்குப்பேட்டை வரை இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து ஆந்திர மாநில அரசு பஸ்கள் நகரி, புத்துார், திருப்பதி வழியாக திருமலைக்கு இயக்கப்படுகின்றன.அதாவது, தமிழக அரசு பஸ்கள் தடுக்குப்பேட்டை சென்றவுடன், அங்கு தயாராக நின்றிருக்கும், ஆந்திர மாநில பஸ்சில், பயணியர் இறங்கி, ஏற்றப்படுகின்றனர்.இதனால், பயணியர் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருமலைக்கு சென்று வருகின்றனர்.இது குறித்து, திருத்தணி போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம், திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து, காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தமிழக - ஆந்திர மாநில எல்லைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar