1947 செப்டம்பரில் டில்லியில் நடைபெற இருக்கும் காந்திஜியின் பிறந்தநாள் விழாவில் எம்.எஸ்., கலந்து கொள்ளவேண்டும் டில்லி வானொலி நிலையத்தினர் கேட்டனர். சூழ்நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவர் பாடிய பாடல் கேசட் டில்லிக்கு அனுப்பப்பட்டது. காந்திஜி எதிர்பார்த்த ஹரி தும் ஹரோ ஜன கீ பீர் (கடவுளே! நீ மக்கள் படும் மனத்துயரைப் போக்கிடுவாய்) என்ற பாடல் அக்கேசட்டில் இடம்பெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றாலும், நம் நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று இருநாடுகளாகப் பிரிந்து போனதை எண்ணி காந்திஜி கவலைப்பட்ட காலம் அது. அதனால், கவலை நீங்க காந்திஜி இப்பாடலைக் கேட்டு ஆறுதல் பெற விரும்பினார். உடனே, இரவோடு இரவாக சென்னை வானொலிநிலையம் சென்று மெட்டு அமைத்து அப்பாடலைப் பாடி பதிவு செய்து டில்லிக்கு அனுப்பினார். காந்திஜியும் அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தார். சிலநாட்களுக்குப்பின், எம்.எஸ்., தம் குடும்பத்துடன் டில்லி சென்று ஒருநாள் மாலைப்பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது காந்திஜி, ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார்.