Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரம் புறப்பட்டது ... கோலாகலமாய் கொண்டாடுவோம் : நவராத்திரி! கோலாகலமாய் கொண்டாடுவோம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு

பதிவு செய்த நாள்

15 அக்
2020
10:10

 சபரிமலை : ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன், தினமும், 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கொரோனா னைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆயினும் ஊரடங்கு தளர்வுகளையொட்டி, பல்வேறு பாதுகாப்பு விதிமுறையுடன் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நோய் தொற்றால் கடந்த 7 மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக, நாளை மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில், தினமும், 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட முக்கிய சுகாதார நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். இதற்காக, 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட, கொரோனா இல்லை என்பதற்கான உறுதிசெய்யப்பட்ட சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தும், முன்பதிவு துவங்கிய சில நிமிட நேரங்களுக்குள் முடிந்து விட்டது. மொத்தம் 1,250 பக்தர்கள் சபரிமலை செல்ல தயாராகி உள்ளனர். நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரசாதம் வழங்குவார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். அக்., 21 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் பம்பையில் குளிக்க முடியாது. சுவாமி ஐயப்பன் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆங்காங்கே கைகழுவ சோப்பு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. நெய் பக்தர்களிடம் வாங்கி அபிஷேக நெய் பிரசாதம் வழங்கப்படும். பின், அப்பம், அரவணை வாங்கி விட்டு பம்பை திரும்பி விட வேண்டும்.கோயில் முன்புறம் உள்ள, முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar