பாதூர் பிரத்தியங்கிரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2020 04:10
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இதனையொட்டி காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பின்னர் பழங்கள், பால், தயிர் யாக குண்டத்தில் கொட்டப்ப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் புடவைகள் யாககுண்டத்தில் போடப்பட்டது. நிகும்பலா யாகத்தையொட்டி பிரித்திங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.