பதிவு செய்த நாள்
17
அக்
2020
11:10
மதுரை: நவராத்திரி கொலு உற்சவம் நேற்று துவங்கியது. மதுரை , மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாட்டுடன் துவக்கம்.
உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர். கோமதி அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்கள் அம்மன் பாடல்கள் பாராயணம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.