வின்ச், ரோப்கார் சேவை எப்போது: பழநி பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2020 12:10
திண்டுக்கல்: பழநியில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வின்ச் மற்றும் ரோப்கார் சேவை எப்போது வரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பழநி மலைக்கோயில் கொரோனா காரணமாக 5 மாதங்களுக்குப் பின், கடந்த செப்டம்பரில்தான் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுக்கு பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அபிேஷக நேரங்களில் பூஜை செய்வோருக்காக மட்டுமே தற்போது வின்ச்கள் செயல்படுகின்றன. ரோப்கார் இயக்கப்படுவதில்லை. ஐப்பசி முதல் தை மாதம் வரை சீசன் நேரம். ஐயப்ப பக்தர்கள், பாதயாத்திரை செல்வோர் என வெளிநாடுகளில் இருந்தும் நவம்பர், டிசம்பரில் வருவர். கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், பெருகார்த்திகை, தீபாவளி என அடுத்தடுத்து தொடர் பண்டிகைகளும் வருகின்றன. இந்நாட்களில் வரும் திரளான பக்தர்கள் படிப்பாதையில் செல்வதிலும் நடைமுறை சிக்கல் உள்ளது. பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் சிரமப்படுவர்.எனவே, வின்ச் மற்றும் ரோப்கார் சேவையை உடனடியாக தொடங்குவது நல்லது. அனைத்தும் முன்னோட்டம் பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அரசும், தேவஸ்தானமும் அனுமதித்தால் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.