பதிவு செய்த நாள்
17
அக்
2020
01:10
ஈரோடு: நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஈரோடு உள் விளையாட்டரங்கில், பிரமாண்ட கொலு காண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி ஒரு நாள் விழா என்றால், தாயார் பார்வதி தேவிக்கு, நவராத்திரி ஒன்பது நாள் விழா. மஹாளய அமாவாசைக்கு பிறகு, ஒன்பது நாட்கள் இந்த விழா நடக்கும்.
முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மன் வழிபாடு, அடுத்து மஹாலட்சுமி வழிபாடு, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு நடக்கும். பெண்களை போற்றி வணங்கும் இவ்விழாவில், வீடுகளில் கலசம் வைத்து, ஒன்பது படிநிலைகளில் கொலு வைத்து சிறப்பு பூஜை நடக்கும். நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி, ஈரோடு கே.என்.கே., சாலையில் உள்ள டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டரங்களில், 2020 பொம்மைகளை வைத்து, பிரமாண்ட கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மானுடம் என்ற ஸ்லோகத்தில், 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில், கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.