திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட48வது நாளை முன்னிட்டு மண்டலாபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனைகளுக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.