பழநி : ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. ஆனந்தவிநாயகருக்கு கணபதிஹோமத்துடன் யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்து, பழங்கள் படைத்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.மேலும் திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.