ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பர்வதர்த்தனி அம்மன் சன்னதியில் அபிேஷக பூஜை நடந்தது. அருகே ஸ்ரீ சக்கரா சுவாமி பூஜைகள் நடந்தது. கொலுபொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. பசிபிணி நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ராமநாதபுரத்தில் அரண்மனை ராஜ ராஜேஸ்வரி அம்மன்கோயிலில் நேற்றுமுன்தினம் காப்புக்கட்டுதல் நடந்தது, நேற்று காமதேனு வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஒளவையார் தெரு கன்னீகாபரமேஸ்வரி கோயிலில் யாகபூஜை, தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கேணிக்கரை தர்மதாவள விநாயகர், முத்தால பரமேஸ்வரியம்மன் கோயிலில் கொலுபொம்மைகள் வைத்து பூஜைகள் நடந்தது. சாயக்காரதெரு முத்துமாரியம்மன் கோயில், ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.