அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2020 11:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று சுவாதியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் ஹோமம், 10:00 மணிக்கு மகா திருமஞ்சனம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்கள் பலரும் தனிமனித இடைவெளியுடன் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.