திருச்செந்துார்: திருச்செந்துார் முருகன் கோயில் சுவாமி ஜெயந்திநாதருக்கு 1.39 கிலோ தங்க கவசம் உள்ளிட்ட நகைகளை சென்னை தொழிலதிபர் ராமசாமி செட்டியார் காணிக்கையாக கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் வழங்கினார். உதவி ஆணையர் செல்வராஜ், பி.ஆர்.ஓ., மாரி முத்து, உள்துறை மேலாளர் வள்ளிநாயகம், நெல்லை மண்டல நகை சரிபாப்பு அலுவலர் சங்கர் உடனிருந்தனர்.