பதிவு செய்த நாள்
20
அக்
2020
05:10
தி.நகர் : சென்னை, தி.நகர், திருப்பதி தேவஸ்தானம் கோவிலில், 300 கிலோ எடை கொண்ட வெண்கல மணி பொருத்தப்பட்டு உள்ளது.
சென்னை, தி.நகர், திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு, கமிட்டியில் உள்ள ஒருவர், 318 கிலோ எடை கொண்ட வெண்கல மணி ஒன்று வழங்கியுள்ளார்.அதன் மதிப்பு, ௬ லட்சம் ரூபாய். கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட வெண்கல மணி, நேற்று கோவிலில் பொருத்தப்பட்டது.இதற்காக, தி.நகர், திருப்பதி தேவஸ்தான கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இம்மணியை, கோவில் பயன்பாட்டிற்கு, தேவஸ்தான கமிட்டி தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைத்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:திருப்பதி கோவிலில், நைவேத்தியம் முடிந்த பின், உணவு உண்பது பக்தர்களின் வழக்கம்.அக்காலத்தில், சந்திரகிரி மன்னர்கள் திருப்பதி கோவிலில் நைவேத்தியம் முடிந்த பின் எழுப்பப்படும், மணியின் ஓசை கேட்டு உணவு அருந்துவர். இந்த வழக்கம், இன்றளவும் திருப்பதியில் உள்ளது.நாளை மாலை, 6:௦௦ மணிக்கு, தி.நகர் திருப்பதி கோவிலில் கருட சேவை நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான திநகர் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.