Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துணிவுடன் சமாளியுங்கள் தெரிந்தே செய்த பாவத்திற்கு பரிகாரம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அந்த சிறுமியின் ஆனந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
05:10

திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிபுரம் மடத்திற்கு பெற்றோருடன் வந்தாள் ஒரு சிறுமி. வியப்புடன் மகாசுவாமிகளைப் பார்த்த அவளிடம், ‘‘உன் பெயர் என்ன?’’ எனக் கேட்டார் மகாசுவாமிகள்.
‘தீபா’ என்றாள். சுவாமிகளுக்கு கேட்காததால், ‘‘கொஞ்சம் சத்தமா சொல்வியா...’’ எனக் கேட்டார்.   
‘தீபா’  என உரத்த குரலில் சொன்னாள். அத்துடன் விடவில்லை.
‘ஸ்பெல்லிங் சொல்லேன்... பார்க்கலாம்’  என்றார்.
‘டி பார் டாங்கி;  ஐ பார் அயர்ன்;  பி பார் பீப்பில்; ஏ பார் ஆன்ட்’ என விளக்கம் அளித்தாள்.  சுவாமிகளும், சுற்றியிருந்தவர்களும் கலகல எனச் சிரித்தனர்.
‘ரொம்ப புத்திசாலியா இருக்கியே?’  என சிறுமியைப் பாராட்டினார். சிறுமியின் முகத்தில் அளவுகடந்த சந்தோஷம். அவளின்  பெற்றோர் முகத்தில் பெருமிதம்.
சுவாமிகள் மேலும் பேச்சைத் தொடர்ந்தார்.
‘நன்னாத் தான் சொல்றே. ஆனா உன் பேரோட டாங்கியையும் ஆன்ட்டையும் சேர்க்கறியே? கழுதை, எறும்புக்கு பதிலா நான்  வேற மாதிரி சொல்லித் தரவா?’’ எனக் கேட்டார்.
சிறுமிக்குப் பரம சந்தோஷம். ‘‘நீங்க சொல்லித் தந்தா கட்டாயம் கத்துக்குவேன்’’ என்றாள் ஆவலுடன்.
‘‘டி பார் தேவி. தேவின்னா அம்பாள். காஞ்சி காமாட்சி கோயில்ல அம்பாளைப் பாத்திருக்கியோ?’’
‘‘பாத்திருக்கேனே? டி பார் தேவி’’  என திருப்பிச் சொன்னாள்.
‘‘அப்புறம் ஐ போர் இளங்கோ. இளங்கோ என்பவர் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை எழுதினவரு. அதுல கண்ணகியோட பெருமையை சொல்லியிருக்கார். உனக்கு கண்ணகியைத் தெரியுமோ?’’
‘‘தெரியுமே! எங்க தமிழ் அம்மா சொல்லியிருக்கா’’  என்ற சிறுமி ‘ஐ பார் இளங்கோ’ என சுவாமிகள் சொன்னதை மனப்பாடம் செய்தாள்.
‘‘அப்புறம் ‘பி பார் பிரகலாதன்’.  இரண்யனோட மகன்; பெரிய விஷ்ணு பக்தன்’’
‘‘நரசிம்ம அவதாரத்தில மகாவிஷ்ணு இரண்யனை வதம் பண்ணின கதை எனக்குத் தெரியும்’’ என பெருமையோடு சொன்ன சிறுமி, ‘பி பார் பிரகலாதன்’ என்பதைச் சொல்லி மனப்பாடம் செய்தாள்.
‘அப்புறம் கடைசி எழுத்து ஏ. ‘ஏ பார் ஆஞ்சநேயர்’  ஆஞ்சநேயர் யார்னு சொல்லு’’ எனக் கேட்டார்.
‘‘ஆஞ்சநேயர் சிறந்த ராம பக்தர்; எனக்குத் தெரியும்’ என்றாள் சிறுமி. ‘ஏ பார் ஆஞ்சநேயர்’  என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.
சிறுமிக்கு கல்கண்டும், பெற்றோருக்கு குங்குமமும் பிரசாதமாக கொடுத்தார் சுவாமிகள். அவர்கள் சென்ற போது சிறுமி ‘டி பார் தேவி; ஐ பார் இளங்கோ’  என சொல்லியதை கேட்டு மகிழ்ந்தார் மகாசுவாமிகள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar