குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 200 கி.மீ., துாரத்தில் மவுண்ட் அபு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிது துாரத்தில் உள்ள அரசூரில் ‘அபு அம்பாஜி’ கோயில் உள்ளது. குஜராத்தில் அம்மனை ‘அம்பாஜி’ என்பர். இங்கு சிலை வடிக்காமல் யந்திரமாக அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த யந்திரத்திற்கு வாரத்தில் ஏழு விதமான அலங்காரம் செய்யப்படும். கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது இந்த கோயிலில் தான் முதல் முடி காணிக்கை (க்ஷௌரம்) செலுத்தினார்.