நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராகி, கவுமாரி, சாமுண்டி என சப்த மாதாக்கள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை வைத்து கொலு வைத்துள்ளனர். தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்கின்றனர். நேற்று மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செ ய்து வருகிறார்.