குமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை ஊர்வலத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2020 04:10
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா அக்.17ல் துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் நாளில் அம்மன் பரிவேட்டை பாரம்பரிய முறைப்படி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் அம்மன் பரிவேட்டை பிரமாண்ட ஊர்வலத்துடன் நடைபெறும். ஆனால் கொரோனாவால் கோவில் வளாகத்துக்குள் பரிவேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் சங்கமும், பா.ஜ., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.இதையடுத்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 16 பேருக்கு பதில் 8 பேர் மட்டும் வாகனம் சுமப்பார்கள். முகக்கவசம், சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளது.