மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், தினமும் மதியம், 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் இறுதி முதல் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நவ., 1 முதல், மீண்டும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக தினமும், 50 பேருக்கு உணவு பொட்டலங்களாக கட்டி வழங்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் கூறினர்.