ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான கோயில்களுக்கும், கொரோனா கால கட்டத்தில் பூஜை நடைபெறாமல் இருந்த கோயில்களுக்கும் ரூ.5000 மதிப்புள்ள பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கரா டிவி, தர்ம ரக்ஷண ஸமிதி அமைப்பு சார்பில் மாவட்டதில் உள்ள 150 கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. மண்டல துணைத்தலைவர் ஆடிட்டர் ரமேஷ் ஆலோசனை பேரில் மாவட்ட தலைவர் ஜெகன்மோகன் அறிவுறுத்தல்படி மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், மூலச்சத்திரம் ஊராட்சி, நாலுபுளிகோட்டை விநாயகர் கோயிலில் பூஜை பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.மண்டல அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், நாகேந்திரன், ஒன்றிய தலைவர் சுகுமாரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் முருகப்பெருமாள் பங்கேற்றனர்.