பதிவு செய்த நாள்
26
அக்
2020
05:10
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய திருவிழாவை முன்னிட்டு மூலவர் பெருவுடையாருக்கு 46 வகையான பெயர் அபிஷேகத்திற்கு பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவையொட்டி, பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு முன்பாக குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் தலைமையில், பெருவுடையாருக்கு மூலிகை, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, கரும்புச் சாறு, விபூதி, தயிர் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 48 மங்கல பொருட்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் முதல்முறையாக ஓதுவார்களால் தேவாரம் திருமுறை பாடி தமிழிலும் பூஜைகள் நடந்தது.