பதிவு செய்த நாள்
27
அக்
2020
11:10
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், இன்று(அக்.,27) முதல், நவ., மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், ஜூன் முதல், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி, நவ., மாதத்திற்கான டிக்கெட்டுகள், இன்று காலை, 11:00 மணி முதல், தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இவற்றை பெற விரும்பும் பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.தினசரி, 16 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே, அலிபிரி சோதனைச் சாவடியில், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.