திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் உள் பிரகாரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2020 12:10
உத்தரகோசமங்கை : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆராதனை நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலுவின் முன்பாக பஜனை, நாலயிர பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு உள் பிரகாரத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் உலாவந்தார். பட்டாச்சாரியாரால் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. *உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் காளை வாகனத்தில் எழுந்தருளி,கோயில் உள் பிரகாரத்தில் காலை 9:00மணிக்கு அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.