Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் ... விருதுநகர் சிவன் கோயிலில் அம்பு எய்தல் விருதுநகர் சிவன் கோயிலில் அம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழலைகள் நாவில் ஓம் எழுதியாச்சு! கோவில்களில் விஜயதசமி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மழலைகள் நாவில் ஓம் எழுதியாச்சு! கோவில்களில் விஜயதசமி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

27 அக்
2020
03:10

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விஜயதசமியை முன்னிட்டு, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமி விழாவையொட்டி, பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெற்றோர் மழலைகளை அழைத்துச் சென்று, நாவில் ஓம் என அர்ச்சகர்கள் மூலமாக எழுதி, சர்க்கரை, பச்சரிசி மற்றும் எழுத்துப்பலகையில், அ என எழுதி கல்வி படிப்பை துவக்க ஆர்வம் காட்டினர்.

பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் கோவிலில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.உடுமலைஉடுமலை, பெரிய கடை வீதி சீனிவாச பெருமாள் கோவிலில், பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து, ஹயக்ரீவர் சன்னதி முன் வித்யாரம்பம் செய்தனர்.குழந்தைகள், கல்விக்கு உகந்த சரஸ்வதி தேவி மற்றும் விநாயகரை வழிபட்டு பாடல்களை பாடினர். தட்டில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் நெல்மணியில், பெற்றோர் குழந்தைகளின் விரல்களை பிடித்து ஆரம்ப கல்விக்கு அடிப்படையாக, அ அகரத்தை எழுதினர்.குழந்தைகளின் நாவில், ஓம் எழுதியும், கல்வி துவங்குவதற்கான சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்தனர். கோவில்களில், நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமான விஜயதசமியை, லட்சுமி சரஸ்வதி, பார்வதி தேவியருக்கு நன்றி செலுத்தும் வகையில், சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, விஜயதசமி நாளில் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதியும், குழந்தைகள் கையால் நெல்மணிகளில் அகரம் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் கண்ணன், குழந்தைகள் நாவில் அகரம் எழுதினர். பின்னர் கோவிலில் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகளும் நடந்தன.வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் விஜயதசமி நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar