* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். * எதிரி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை போதும். * கடவுள் விரும்பும் காணிக்கை இரண்டு; பொறுமை, நம்பிக்கை. * கடவுளைத் தேடுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோள். * எல்லா உயிர்களிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். * தகுதி உள்ளவருக்கு மட்டுமே கடவுளின் தரிசனம் கிடைக்கும். * துன்பத்தில் இருந்து விடுபட மனதை கடவுளின் பக்கம் திருப்புங்கள். * கடவுளைத் தவிர வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. * வழிபாட்டுக்கு ஆடம்பரம் கூடாது. பக்தி இருந்தால் போதும். * கடவுளைச் சரணடைந்து வாழ்வதே உண்மையான விரதம். * யாரிடமும் பகை வேண்டாம். அனைவருமே கடவுளின் பிள்ளைகள். * ஆணவம் இன்றி கடவுளின் வேலைக்காரனாக சேவையில் ஈடுபடுங்கள். * உலகம் பற்றிய கவலை வேண்டாம். உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். * உண்மை எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம். * உடம்பை புறக்கணிப்பதோ, அதிகம் பராமரிப்பதோ கூடாது. * பணம் எவ்வளவு இருந்தாலும், கர்ம வினையை அனுபவித்தாக வேண்டும். * பொறுமையைக் கைவிடாதீர். தாமதமானாலும் பலன் கிடைக்கும். * கடவுளிடம் சரணடைவதே உண்மையான கவுரவம். * பணியில் கவனம் செலுத்துங்கள். ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும். * ரகசியம் எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார். * தர்மவழியை பின்பற்றினால் கடவுளின் அருளைப் பெற முடியும். * தேவையானதை பணிவுடன் கடவுளிடம் கேளுங்கள்; நிறைவேற்றுவார். * பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடக் கூடாது.