* கல்வி என்னும் அழியாத செல்வத்தை தேடுபவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். * உலகத்தையும், உலகப் பொருள்களையும் விட கல்வி மேலானது. * கல்வி என்பது அனைவருக்கும் உரிய அவசியக் கடமை. * கல்வியறிவு என்பது கருவூலப்பெட்டகம் போல மதிப்பு மிக்கது. * கற்கும் போது கேள்வி கேட்பதன் மூலம் நால்வருக்கு நன்மை ஏற்படும். கேள்வி கேட்பவர், விளக்கம் அளிப்பவர், செவி மடுப்பவர், இவர்களின் மீது அன்பு வைத்திருப்பவர் * ஆயிரம் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறுவதை விட அறிஞரின் தொண்டு சிறப்பானதாகும். நபிகள் நாயகம்