பில்லி கிரஹாம் என்பவர் பக்தியின் தன்மையை விளக்குகிறார். சொந்த தேவை, பிரச்னைக்காக கண்ணீர் விட்டால் அது உங்களின் பலவீனம். ஆனால் மற்றவர் மீதுள்ள அன்பால் கண்ணீர் விட்டால் அது உங்களின் பலம். மற்றவர் மீது காட்டும் அன்பைக் கொண்டே, ஆண்டவர் மீதுள்ள அன்பை அளவிட முடியும். சக மனிதருக்காக உயிரையும் கொடுக்கும் தியாக உள்ளம் இருக்க வேண்டும். அத்தகைய அன்புள்ளம் பெற்றவரே உண்மையில் இறைநேசம் கொண்டவர்கள்.