Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் கோவில் தேருக்கு புதிய ... எல்லோரும் கொண்டாடுவோம்: இன்று மிலாடி நபி எல்லோரும் கொண்டாடுவோம்: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் வார நாட்களில்-1000; சனி, ஞாயிறு-2000 பேரும் தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வார நாட்களில்-1000; சனி, ஞாயிறு-2000 பேரும் தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

30 அக்
2020
10:10

சபரிமலை: மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பேரும் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது: மண்டல சீசனுக்கு நவ.,15 மாலை நடை திறக்கப்படுகிறது. நவ.,16 முதல் தரிசனத்திற்கு அனுமதி வழக்கப்படும். டிச.,26 மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்பட்டு டிச.,30 மாலை நடை திறக்கும். ஜன.,20 வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு ஜன.14 நடைபெறும். தரிசனத்திற்கு இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவர்கள் 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும். வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு இரண்டாயிரம், மண்டலபூஜை, மகரவிளக்கு நாட்களில் ஐந்தாயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை பாதைகளின் பல்வேறு இடங்களில் கோவிட்-19 பரிசோதனை மையம் அமைக்கப்படும். பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதி கிடையாது. சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக மட்டுமே பக்தர்கள் ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். பம்பை, சன்னதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது. பக்தர்கள் கொண்டு வரும் நெய் கவுண்டர்களில் பெறப்பட்டு ஊழியர்கள் அபிஷேகத்துக்கு கொண்டு செல்லப்படும். நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வரும் வாகனங்கள் பம்பை சென்று இறக்கிவிட்டு நிலக்கல் வந்து பார்க்கிங் செய்ய வேண்டும். மலைபாதையில் அவசர சிகிச்சை மையங்கள் இயங்கும். பணி நிமித்தமாக வருபவர்களும் கண்டிப்பாக கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் தான் வரவேண்டும். பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar