சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து தாமதமாக மலையேற அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2020 11:10
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். இரவில் பெய்தமழையால் மாங்கனி, சங்கிலிப்பாறை ஓடைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால் நேற்று 2 மணிநேரம் தாமதமாக காலை 8:30 மணிக்குமேல் தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணி வரை குறைந்த பக்தர்களே வந்திருந்தனர். அவர்களும் விரைந்து தரிசனம் முடித்து மலை அடிவாரம் திரும்பினர். கனமழை எச்சரிக்கையால் மழையின் தன்மையை பொறுத்தே பக்தர்கள் பவுர்ணமி வழிபாட்டிற்கு மலையேற அனுமதிக்கபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.