திண்டிவனம்; திண்டிவனத்தில், சாய்பாபாவின் 102 வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகிலுள்ள, கற்பக விநாயகர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின் 102வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து 108 ஓம பூஜையும், பின்னர் கோவில் வளாகத்தில் சாய்பாபாவின் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி நேற்று பிற்பகல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய் சக்தி கணேச மண்டலி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.