பதிவு செய்த நாள்
30
அக்
2020
03:10
திருக்கழுக்குன்றம்; நெரும்பூரில் பழுதடைந்து வரும் திருவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பழுதடைந்த நிலையில் உள்ளது.கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் சுற்றுப்பகுதி மற்றும் ராஜகோபுரத்தில், செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இக்கோவில் முழுமையாக சீரழிந்துவிடும் என, பக்தர்கள் கூறுகின்றனர். அவ்வப்போது, 100 நாள் பணியாளர்கள், கோவில் வெளிப்புற வளாக பகுதிகளை மட்டும் துாய்மை செய்கின்றனர். எனவே, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், இக்கோவிலை முழுமையாக புனரமைக்க முன் வரவேண்டும் என, பொதுமக்கள் மற்றும்பக்தர்கள் கோரியுள்ளனர்.