பதிவு செய்த நாள்
31
அக்
2020
06:10
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பவித்ரோற்சவ விழா துவங்கியது. அதனையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், முதல் கால யாக வேள்வி பூஜை, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை மூலமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூலமூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பவித்ர மாலை சாற்றும் வைபவம், பவித்ரோற்சவ சாந்தி வேள்வி, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் காலை யாக சாலை பூஜை, வித்யா சிவதத்துவ பவித்ரம் சமர்ப்பித்தல், தீபாராதனை நடந்தது.விழாவின் நிறைவாக இன்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி பூஜை, சண்டிகேஸ்வரர் வழிபாடு, மகா பூர்ணாகுதி, சாந்தி கலசாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.