Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விளநகர் கோவிலில் சனி பகவான் கற்சிலை ... முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலத்தை மீட்க திரண்ட மக்கள்
எழுத்தின் அளவு:
கோவில் நிலத்தை மீட்க திரண்ட மக்கள்

பதிவு செய்த நாள்

03 நவ
2020
10:11

 திருப்பூர் : ஆயுதப்படை போலீஸ் அலுவலகம் கட்ட, ஒதுக்கப்பட்ட கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பூரில், ஆறு மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 10 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவை, அப்பகுதியினர் கொண்டாடி வருகின்றனர்.தற்போது அந்த இடம், மாநகர ஆயுதப்படை அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்ட ஒதுக்கப்பட்டது. கோவில் நிலத்தை, கோவிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர், மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையம் பிரிவில், நேற்று காலை, 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

கோவை காமாட்சிபுரி ஆதினம், சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆறு மணி நேரம் நடந்த போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கோவில் மீட்புக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் பேசி தீர்வு காணலாம் என போலீசார் அறிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.போராட்டம் தொடரும்ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது;தமிழகம் முழுதும் பல இடங்களில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


அவற்றில், கலெக்டர் அலுவலகம், கோர்ட், பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளன.ஆன்மிக பெரியோர் கொண்ட குழுவை ஏற்படுத்தி, கோவில்களை பராமரிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகிறோம். திருப்பூர், பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவில் இடத்தை, கண்டிப்பாக மீட்க முயற்சி செய்வோம். இதற்காக, தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar