பதிவு செய்த நாள்
03
நவ
2020
03:11
விருத்தாசலம் : கிருத்திகையை முன்னிட்டு, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி ரோடு வேடப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நெய்தீபமேற்றி வழிபட்டனர்.