மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் ஐப்பசி பவுர்ணமி நிலவு வழிபாடு, அருட்பெருஞ்ஜோதி அவதார சிவாகம பூஜை நடந்தது. அமைப்பாளர் வேங்கடராமன் முன்னிலை வகித்தார். கொரோனா நீங்கவும், ஆரோக்கிய சூழல் உருவாகவும் சன்மார்க்க சேவகர் ராம நாதன் வழிபாடு நடத்தினார். ஜனனி ரத்னேஸ்வரி மங்கள ஆரத்தி செய்தார்.