Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தவாடி கோவிலில் குரு பெயர்ச்சி ... பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது: ஐகோர்ட்
எழுத்தின் அளவு:
கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது: ஐகோர்ட்

பதிவு செய்த நாள்

04 நவ
2020
12:11

சென்னை : நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை கோயிலின் ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோயில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன .புனரமைப்பு குழு தொடர்பான வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


இவ்வழக்கு விசாரணையின் போது பழமைவாய்ந்த மூன்று கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் சரிபார்த்து தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர். மேலும் இதுபோன்று எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வழக்கறிஞர் வெங்கடேஷ் செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க உத்தரவு எதும் பிறப்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறினார். தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது என இணை ஆணையர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். தங்களின் அறிவுறுத்தலை அறநிலையத்துறை ஆணையரிடம் அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர். ஆணையரிடம் தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞரும் உறுதி அளித்தார். அறநிலையத்துறை சார்பில் எந்த அடிப்படையில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதற்கும் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை நவ., 18ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar